districts

img

100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கல்

பெரம்பலூர், பிப்.8-  பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை  போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் சனிக்கிழமை வழங்கினார்.  இந்நிகழ்வில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:   பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் லப்பைக்குடிகாடு வீட்டுவசதி சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பதிவு செய்து, பெண்ணகோணம் (வடக்கு) கிராமத்தில் லப்பைக்குடிகாடு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கிரையம் மனைகளாகப் பிரித்து, ஜமாலியா நகர் என்று பெயரிடப்பட்ட பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதால், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுமார் 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் இப்பகுதி ஜமாத் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டோம்.  அதனடிப்படையில் மாவட்ட  ஆட்சியர் தொடர் நடவடிக்கையால், மாவட்ட வருவாய் அலுவ லரின் முயற்சியால் வருவாய்த்துறை யினர், நில அளவைத் துறை யினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, 380 நபர்களில்  முதல்கட்டமாக 100 நபர்களுக்கு  வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு உள்ளது, மீதமுள்ள நபர்களுக்கும் விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ந.பவன்குமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர் உசேன், ஜமாலியா நகர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.