புதுக்கோட்டை, நவ.17 - சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் நவீனன் நினைவு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வாசகர் பேரவையின் தலைவர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் தங்கம்மூர்த்தி, சி.சேதுராமன், எழுத்தாளர் சோலச்சி, எம்.தாமோதரக்கண்ணன் ஆகியோருக்கு நவீனன் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை எழுத்தாளர் நவீனனின் மகனும் அறக்கட்டளையின் நிர்வாகியுமான ரவி நவீனன் வழங்கினார். அவர் எழுதிய ‘உழல் வலிகள்’ என்ற நூலை அறிமுகம் செய்து, கவிஞர் தங்கம்மூர்த்தி பேசினார். முன்னதாக வாசகர் பேரவையின் செயலர் பேரா.சா.விஸ்வநாதன் வரவேற்க, அ.சி.நாகேஸ்வரன் நன்றி கூறினார்.