districts

img

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனே சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், ஜூன் 1-

     மின்கம்பி வடம் தாழ்வாகச் செல்லும் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என சிபிஎம் கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

     திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய  வயல்வெளி பகுதியில் செல்லும் மின்கம்பி வடம் மிக தாழ்வாக உள்ளது. இதனால் அடிக் கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த செவ்வாயன்று கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த வேம்பு என்ற பெண் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் உயிரி ழந்தார்.

    இதைபோல், கொத்தங்குடி அகரமேடு பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன், அவரது கொடியாடுகளுடன் மேய்ச்சலுக்கு போன இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாயின. மேலும்  உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள உபேந்திரபுரம் ஊராட்சி, பொன்னரை, போலக்குடி ஊராட்சி யில் காலனி தெரு, பண்டாரவடை ஊராட்சி கொட்டூர் மற்றும் வேலங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வயல்வெளிகளில் மின் கம்பிகள் தாழ்வாகவும், சிமெண்ட் மின்  கம்பங்கள் கரைப்பெயர்ந்தும் அபாய நிலை யில் உள்ளன.  

   எனவே நன்னிலம் ஒன்றியம் முழுவதும்  முழுமையாக களஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்னிலம் 4-ஆவது வார்டு சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.