districts

ஓய்வூதியர்கள் டிஜிட்டல் சான்றிதழ் சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி, நவ. 2 மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம்  தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச்  சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால் காரர்கள் மூலம் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதா ரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக,  அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா  போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி”. ஓய்வூதியதா ரர்கள் வீட்டிலிருந்த படியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD App  முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ்  சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்கா ரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதா ரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண். PPO எண் மற்றும் ஓய்வூ திய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒரு சில  நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றி தழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள  அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால் காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https:// ccc. cept.gov.in/ServiceRequest/ request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து  ஓய்வூதியதாரர்கள் தங்களின் சேவை கோரிக்கையை ஆன்லைனில் பதிவு செய்ய லாம். அந்தந்த பகுதி தபால்காரர்கள் மூலம் வீட்டிற்கே வந்து சேவை வழங்கப்படும். இந்த  சேவையை வழங்க அனைத்து அஞ்சல கங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல்  சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சிறப்பு முகாம் நவம்பர் 4ம்  தேதி ஏரல், நவம்பர் 8ஆம் தேதி புதுக்கோட்டை,  நவம்பர் 16ஆம் தேதி ஒட்டப்பிடாரம், நவம்பர்  25ஆம் தேதி ஆத்தூர் ஆகிய அஞ்சல கங்களில் நடைபெற உள்ளது. ஓய்வூதிய தாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முது நிலை கண்காணிப்பாளர்சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.