districts

பேரூராட்சி துணைத்தலைவர் பதவி : திமுக கவுன்சிலர் ராஜினாமா

திருச்சிராப்பள்ளி, மார்ச்.10- திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி 10-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேட்டியிட்டு ஆர்.கலைச் செல்வி வெற்றி பெற்றார். தொட்டி யம் பேரூராட்சி துணைத்தலை வர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கி யது.  இந்நிலையில், இதை மீறி  6-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஷ் துணைத் தலைவருக் கான மறைமுக தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதை யடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவியை ராஜி னாமா செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அறிவுறுத்தலின்படியும் தொட்டி யம் பேரூராட்சி துணை தலைவர் பதவியை ராஜேஷ் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புதனன்று வழங்கினார். இதனை சிபிஎம் மாவட்டக்குழு சார்பில் வரவேற்பதாக புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.