districts

img

காரையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் திறப்பு

பொன்னமராவதி, செப்.21 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.35 லட்சத்தில் ஆர்.பாலகுறிச்சி துணை சுகாதார நிலையம், ரூ.20 லட்சத்தில் நமணசமுத்திரம் துணை சுகாதார நிலையம் என ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையாக இயங்க நடவடிக்கை தேவை

காரையூருக்கு வந்த தமிழக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் புதுக்கோட்டை மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தின்  (சிஐடியு) ஒன்றியச் செயலாளர் தீன்  அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ள தாவது: பொன்னமராவதி நகரத்தின் பேருந்து நிலையம் அருகே மையப் பகுதியில் அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் பல பத்தாண்டு களாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம்,  அதிக மக்கள் மற்றும் கர்ப்பிணிகள் பயன் பெறுகின்றனர்.  இந்நிலையில் அதன் கட்டிடங்கள் சிதில மடைந்து இருந்ததால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. தற்போது ஒரு சிறிய கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. சிறிய கட்டி டத்தில் இயங்குவதால் பிரசவங்கள் பார்க்க இடவசதி இல்லை. இதனால் இங்கு  சிகிச்சைபெறும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவ நேரத்தின்போது, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார  நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். இதனால் இந்தப் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பழைய மருத்துவமனை கட்டடம் இடிக்கக் பட்டு பல மாதங்களாகியும் இன்னும் புதிய கட்டுமானப் பணி துவங்கப்படாமல் உள்ளது. புதிய கட்டடத்தை விரைவில் கட்டி, சுகாதார நிலையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதுவரை தற்காலிகமாக பெரிய அளவிலான  கட்டடத்தில் சுகாதார நிலையம் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.