districts

img

பொன்னமராவதி 1431ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் 1431ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 173 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, சனிக்கிழமை மாலை நடைபெற்ற குடிகள் மாநாட்டில், 24 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.