புதுக்கோட்டை, பிப்.3 - பொன்னமராவதி - புதுக்கோட்டை புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், புதுக்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட பொன்னமராவதி - புதுக்கோட்டை புதிய வழித்தட பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது. பொன்னமராவதியில் இருந்து இடையாத்தூர், ஆலம்பட்டி, சேரனூர் வழியாக புதுக்கோட்டைக்கு காலை 5.40 மணிக்கும் மற்றும் மாலை 6.30 மணிக்கும், இப்பேருந்து புதுக்கோட்டையில் இருந்து சேரனூர், ஆலம்பட்டி, இடையாத்தூர் வழியாக பொன்னமராவதிக்கு காலை 7.40 மணிக்கு இயக்கப்படும். இதன்மூலம் ஆதனிப்பட்டி, ஆலம்பட்டி, முரட்டாம்பட்டி, காரையாம்பட்டி, காடம்பட்டி, பாறைகளம், கொன்னையம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,850 பேர் பயனடைவர்” என்றார்.