districts

img

குளத்துநீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்

புதுக்கோட்டை, மே 29-  

     குளத்து நீரை பயிருக்கு மட் டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்த ரவுடன் கூடிய தொண்டைமான்  கல்வெட்டு புதுக்கோட்டை  மாவட்டம் கந்தர்வகோட்டை  அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

     இதுகுறித்து கல்வெட்டு ஆய்  வாளர் ஆ.மணிகண்டன் கூறுகை யில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம்  புதுக்கோட்டை வட்டம் கல்லுக்கா ரன்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சம் பட்டிப்பட்டி என்ற சிற்றூர். இங்கு கல் பலகை நட்டிருப்பதாக கிடைத்த  தகவலின் பேரில் மேற்படி கிரா மத்திற்குச் சென்று ஆய்வு மேற் கொண்டோம்.

    அப்போது, திருமலைராய தொண்டைமான் பெயரில், 1758-ஆம் ஆண்டு பிரம குளத்தில் பயி ருக்கு மட்டும் நீர்ப்பாய்ச்சும் பாசன உரிமையுடன், பிரமன் வயல் நிலத்தை  சறுவமானியமாக கொடுத்த தக வலடங்கிய கல்வெட்டு என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வயலில்  வாமன கோட்டுருவமும், எல்லைக்கல் லிற்கும் வட மேற்கிலுள்ள புத ரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டு விக்கப்பட்டுள்ளது.

 கல்வெட்டில் உள்ள தகவல்

    சாலிவாகன சகாப்தம் 1679,  கலியுகம் 4858 என்றும், வெகு தானிய வருடம் ஆவணி மாதம்  மூன்றாம் திகதி என குறிப்பிடப் ட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டாக 1758 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என  கணிக்கலாம். இந்த காலக்கட்டத்  தில் விசைய ராகுநாதராயத் தொண்டைமானர் ஆட்சி பொ.ஆ 1730 முதல் 1789 வரை நிலவியது.  

   ஏழு அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பல கைக்கல்லின் இருபுறமும் 80 வரி களுடன் எழுத்து பொறிப்பு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கள சொல்லு டன் தொடங்குகிறது. சாலிவாகன ஆண்டு மற்றும் கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  

   இதில் தொண்டைமான் மன் னர்களின் பூர்வீகம் குறித்த தக வலாக ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, பன்றி சூழ் நாடு,  அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடை யார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும் என்ற சொற்றொடரில் உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும் இவ்வூரில் இருக்கின்ற பகவாந் ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு, சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்  துள்ள பிரமன் வயலை சறுவ மானி யமாக வழங்கிய மன்னரின் உத்த ரவு தாமிரத்தில் எழுதி சாசனமாக்  கப்பட்டதையும், வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லை களாக கிழக்கு எல்லையாக கீழக் காட்டுக்கு மேற்கு எனவும், தென்  புறத்தில் புளியடிக்கு வடக்கு என வும், மேற்கு பாக்கெல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும் வட பாக்கெல்லையாக கொத்தகத்து  வயலுக்கு தெற்கு எனவும் வரை யறுக்கப்பட்டு இந்த பெரு நான் கெல்லைக்குட்பட்ட நஞ்சையும், புஞ்சையும், பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும் உத்தரவுடன், இந்த சாச னத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கல்வெட்டுப்பகுதி முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது.

   இறுதியாக, தொண்டைமான் மன்னர் சார்பாக பழனியப்ப வாத்தி யார் என்பாரின் ஒப்பத்துடன் சறுவ  மானியம் வழங்கப்பட்டதை கல் வெட்டு மூலம் அறிய முடிகிறது.

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்

    தற்போது கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்த மான நிலத்தில் இந்த வாமன  கோட்டுருவம் நட்டு வைக்கப்  பட்டுள்ளது. இது கல்வெட்டி லுள்ள எல்லையை குறிப்பதற்காக நடபட்டதை உறுதி செய்கிறது. இது தொண்டைமான் மன்னர்  களின் தனித்துவ குறியீடாகும்,  தொண்டைமான் செப்பு பட்ட யங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

சறுவ மானியம் வழங்கியது யார்?

   திருமலைராய தொண்டை மான் (பொ.ஆ.1729) மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம் இக்கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசைய ராகுநாத ராய தொண்டை மான் பொ.ஆ. 1730-ஆம் ஆண்டு  தொடங்கி பொ.ஆ. 1790 வரை  ஆட்சி புரிகிறார் என்பதால் இக்  காலத்தில், தனது தந்தையாரின் நினைவாக இந்த இந்த சறுவ  மானியத்தை வழங்கியிருப்ப தோடு தனது பெயரை இக்கல் வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த சறுவமானியத்தை திருமலை ராய தொண்டைமானுக்காக பழ னியப்ப வாத்தியார் என்பவர் ஒப்ப மிட்டு வழங்கியிருப்பது குறிப்பி டத்தக்கது’’ என்றார்.

;