அரியலூர், ஜூலை 3- சுற்றுப்புற சுகாதா ரத்தை பாதுகாக்க அனை வரும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட மாசு கட்டுப் பாட்டு வாரிய பொறியா ளர் முரளி. உலக நெகிழிப் பை ஒழிப்பு தினத்தை யொட்டி, அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசிய தாவது: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பையை பயன்படுத்தக் கூடாது. மாறாக துணிப்பை அல்லது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 மில்லியன் நெகிழிப் பைகள் பயன்படுத்தப் படுகின்றன. அதில் ஒவ்வொரு இந்தியர்களும் ஆண்டுக்கு 11 கிலோ நெகிழிப்பையை பயன்படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் 200 பைகளில், ஒரு பை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 10 லட்சம் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படு கின்றன. அத்தகைய நெகிழிப்பை மக்கு வதற்கு குறைந்தது 300 முதல் 1,000 ஆண்டு வரை ஆகிறது. அதிகமாக பயன்படுத்தப்ப டும் நெகிழிப்பைகளால் பறவைகள், கால்நடைகள், வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் உயிரிழக்கின்றன. தப்பி பிழைக்கும் ஒரு சில உயிரினங்களி லும் நெகிழி பொருள்கள் கலந்துள்ளன. அத்தகைய நீர் வாழ்வு உயிரினங்களான மீன்களை மனிதர்கள் உண்ணும் பொழுது நெகிழி பொருள்கள் கலந்து இதயம், சிறுநீர கம், இனப்பெருக்க உறுப்புகள், ஹார்மோன் கள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மனிதன் ஆளாகிறான். எனவே ஒவ்வொரு மனிதனும், “நெகி ழியை தொட மாட்டோம்” என உறுதிமொழி ஏற்க வேண்டும். துணிப்பையை பயன்படுத்த வேண்டும் துணிப் பையை பயன்படுத்து வதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர், விழிப்புணர்வு பேர ணியை கொடியசைத்து தொடக்கி வைத் தார். பேரணியின் போது, அனைத்து வீடுகளுக் கும், கடைகளுக்கும் பள்ளிகள் சார்பில் மஞ்சப் பை வழங்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியாளர் சுதாகர், சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பா ளர் நிக்கில் ராஜ் ஆகியோர் பேசினர்.