அறந்தாங்கி, மே 21-
அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழகம், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிக்கலாம் எனும் உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடத்தின.
அறந்தாங்கி ஜ எம் ஏ தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் .விகாஸ் சரவணன், திசைகள் அமைப்பின் பொருளாளர் .முகமது முபாரக் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சற்குருநாதன் வரவேற்றார்.
திசைகள் அமைப்பின் தலைவர் தெட்சி ணாமூர்த்தி துவக்க உரையாற்றினார். உரையும், புரையும் நிகழ்த்தினர். மருத்துவம் குறித்து நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அசாருதீன், கலை அறிவியல் படிப்புகள் குறித்து பேரா வூரணி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சண்முகப்பிரியா, பொறியியல் மற்றும் வேளாண்மை குறித்து கபார்கான், ஆசிரியர் மற்றும் சட்டப்படிப்புகள் குறித்து ஆசிரியர் கீதாஞ்சலி மஞ்சன், கல்விக்கடன் பெறுவது குறித்து பேராவூரணி ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திசுரேஷ் ராஜ் நன்றி கூறினார்.