புதுக்கோட்டை, ஜூலை 29 -
பசுமைப் போர்வை யினை உயர்த்தும் வகையில் ஆண்டுதோறும் புதுக் கோட்டை மாவட்டத்தில் 61.1 மரக்கன்றுகள் நட திட்ட மிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
வனத்துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பசுமைக்குழு கூட்டத் திற்குப் பிறகு அவர் தெரி வித்ததாவது:
தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், மாநிலத்தின் பசுமை போர்வையினை, அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது உள்ள 23.27 சதவீதத்தி லிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் வகையில், பசுமை தமிழகம் இயக்கம் உருவாக்கப்பட்டு அனைத்து துறைகளின் மூலம் மரக் கன்றுகள் நடவு செய்ய வுள்ளன.
புதுக்கோட்டை மாவட் டத்தை பொறுத்தவரை 7.89 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீத மாக உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 61.1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திட வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சி யர் தலைமையில் மாவட்ட பசுமைக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
இக்குழு வனத்துறை யுடன் இணைந்து வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மைத்துறை, தோட்டக் கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் மரக்கன்று களை ஆண்டுதோறும் நடு வதற்கு இலக்கீடுகள் நிர்ண யிக்கப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் http://gtm.org.in/gtmapp/login.aspx என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தெரி வித்துள்ளார்.
மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், கோட்டாட்சி யர்கள் முருகேசன் (புதுக் கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.