districts

img

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு மறியல்

புதுக்கோட்டை, ஆக.10-  

    புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே குடி நீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே துவார்  பகுதியில்  500-க்கும் மேற்  பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தப் பகுதி யில் கடந்த ஆறு மாதங்க ளுக்கு மேலாக குடிநீர் பிரச்  சனை இருந்து வருவதாக வும், இது சம்பந்தமாக ஊரா ட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    தண்ணீர் பிரச்சனை யால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள்  சிர மம் அடைந்து வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளதாக வும் மக்கள் வேதனை தெரி வித்தனர். இதனால் தன்னெ ழுச்சியாகத் திரண்ட மக்கள்  குடிநீர் வசதி கேட்டு துவார் பேருந்து நிறுத்தம் முன்பு காலிக் குடங்களுடன் வியா ழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

    சாலை மறியலில் ஈடு பட்டவர்களிடம் மழையூர்  காவல் உதவி ஆய்வாளர்  சாமிக்கண்ணு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்  கப்படும் என உறுதியளித்த தைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.