திருச்சிராப்பள்ளி, மார்ச் 2 - பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து அர சாணை வெளியிட வலியுறுத்தி, இந்திய பிசியோ தெரபிஸ்ட் சங்கம் சார்பில் திருச்சி ஜங்ஷனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு ஒன்றிய-மாநில அரசு திட்டங்களில் பணியாற்றும் பிசி யோதெரபி மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ.35 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரி பெயர்ப் பலகைகளில் இடம் பெற்றுள்ள சிகிச்சை என்ற வட மொழிச் சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் செயல்படும் பிசியோதெரபி கல்லூரி களின் பெயர்ப் பலகைகளில், மருத்துவ இயன்முறை மருத்துவக் கல்லூரி என தமிழில் அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ண குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பூர்ணிமா, இணைச் செயலாளர் ரமேஷ்குமார், ஒருங்கி ணைப்பு குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.