districts

img

பெரம்பலூர் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர், நவ.18- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், திங்கள் கிழமை நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கூடலூரில் இருந்து கூத்தூர் கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே மருதையாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழையின் போது அதிக தண்ணீர் வருவதால் பொது மக்கள் கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் கூத்தூர் கிராமத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனை, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்க ளுக்கு சென்று வருவது என இந்த சாலையை பயன்படுத்தி வருகின்ற னர். இது மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர். எனவே, தங்க ளுக்கு போர்க்கால அடிப்படையில் கூடலூர் - கூத்தூர் இடையே மருதையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் எனவும், அவ்வாறு அமைத்து தரா விட்டால் தங்களது வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை ஆட்சியரிடம் ஒப்படைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.