districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை கோரி மனு

கும்பகோணம், அக்.14 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத் திற்கு உட்பட்ட வீராகண் ஊராட்சி, பரவ னூர் கிராமத்தில் வசிக்கக் கூடிய விவசா யத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி, திருவிடைமருதூர் வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. திருப்பனந்தாள் ஒன்றியம் வீராகண்  ஊராட்சி, பரவனூர் பகுதியில் ஏராள மான பட்டியலின வகுப்பைச் சார்ந்த விவ சாய ஏழை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வீட்டு மனை இல்லாமல் ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு மனை பட்டா வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பனந்தாள் ஒன்றி யம் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில், வட்டாட்சியரை சந்தித்து பரவனூர் பகுதியில் வசிக்கும் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் 53  குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை  பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை  மனுவினை வழங்கினர். மனுக்களை பெற்ற வட்டாட்சியர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருப்பனந்தாள் ஒன்றியச்  செயலாளர் ஏ.எஸ்.பாரதி, சாமிக்கண்ணு,  மாதர் சங்க பொறுப்பாளர் அறிவுராணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.