மயிலாடுதுறை, நவ.5 - சுனாமி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகேயுள்ள மீனவ கிராம மான பெருமாள்பேட்டை சுனாமி குடி யிருப்பில் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வரு கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து சாலைகளில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் ஒரு சில வீடு களில் மழைநீர் உட்புகுந்து விட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். மக்கள் வீடுகளை விட்டு வெளி யேற முடியாமல் உள்ள நிலையில், பாம்பு போன்ற விஷஜந்துகள் வீடுகளுக் குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாத தாலும், சாலையை முறையாக அமைக்காததுமே குடியிருப்பு பகுதி களில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு காரணம் என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தேங்கி யிருக்கும் மழைநீர் உடனே வடிவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.