districts

பூதலூரில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா

தஞ்சாவூர், மே 18-

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் நிரந்தர நேரடி நெல்  கொள்முதல் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

   தமிழ்நாடு விவசாயிகள் சங்க பூதலூர் தெற்கு ஒன்றியத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், பூதலூரில் நடைபெற்ற  வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவல ரும், வருவாய் கோட்டாட்சியருமான பழனிவேலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  

   அந்த மனுவில், ‘‘பூதலூர் கோயில்பத்து பகுதிகளுக்  கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேரடி நெல் கொள்  முதல் நிலையம் அமைக்க இடம் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.  

   தற்சமயம் புல எண் 544 / 1பி மற்றும் 544/1சி, இல் சுமார்  ஒன்றரை ஏக்கர் தரிசு நிலம் உள்ளதாக தெரிகிறது. எனவே,  தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர  வேண்டும். இப்பகுதி விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.