அரியலூர், பிப்.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெரு அருந்ததியர் இன மக்கள் பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை யில் மீண்டும் மனு அளித்தனர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துசாமி, ஆர். ரவீந்திரன், மூத்த நிர்வாகிகள் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி உறுதி அளித்தார்.