districts

img

நாஞ்சிக்கோட்டையில் பூங்கா இடங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

தஞ்சாவூர், பிப்.9-  தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிராஜ்பூர் நகரில் காலி இடத்தில், கொட்டகைகளை அமைத்தது தொ டர்பாக கோட்டாட்சியரால் விதிக்கப் பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என சிராஜ்பூர்  நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் துணை வட்டாட்சியர் திப்பு சுல்தானிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சிராஜ்பூர் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள வர்களுக்காக அமரன் பூங்கா, மைமூன் பூங்கா, ஷேக்நூர் பூங்கா ஆகியவை உள்ளது.   இந்நிலையில், 500க்கும் மேற் பட்டோர் பூங்காவுக்கான இடங்களை ஆக்கிரமித்து கயிறுகளையும், கம்பு களையும் கட்டி தற்காலிகமாக குடி சைகளை அமைத்துள்ளனர். நகரில் குடியிருப்போருக்காக உள்ள நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடங்கள், பூங்கா பகுதிகளில் செடி, கொடிகள் மண்டியிருந்ததால், அதனை சுத்தம் செய்த போது, 40 அடி சாலையின் தெற்கு பகுதியில், திடீரென கொட்டகை அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். அப்போது கோட்டாட்சியர் ஆக்கிர மிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இத னால் அங்கு தற்போது காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பூங்காவை சுத்தம் செய்ய  அங்கு விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும். நகருக்கு சொந்தமான பூங்காக்களை சுத்தம் செய்ய காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப் பட்டுள்ளது.