மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட் டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில் மொத்தம் 209 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நட வடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5479 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்தி ரங்கள், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத் தின் மூலம் 15 கிறிஸ்தவ பெண்களுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைக் கான காசோலை என மொத்தம் ரூ.1,77,395 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.