திருவாரூர், பிப்.9- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடவும், மக்களின் ஜனநாயக உரி மைகள், சமூக நீதி பறிக்கப் படுவதை தடுத்து நிறுத்திடவும், மத நல்லிணக்கத்தை பேணி காத்திடவும் வலி யுறுத்தி அகில இந்திய சமா தான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் முதல் மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கே. என்.முருகானந்தம், வீ.தர்ம தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பி னர் நாகை வி.பி.மாலி சிறப் புரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், காங்கிரஸ் மாவட்டச் செய லாளர் அன்பு வே.வீரமணி, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆருர்.சீனி வாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில், அமைப்பின் தலைவராக பூண்டி.கலை வாணன், செயலாளராக கே. என்.முருகானந்தம், பி.தர்ம தாஸ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.