districts

காற்றோட்ட வசதியில்லா பட்டுக்கோட்டை அஞ்சலகம்

தஞ்சாவூர், ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரிலுள்ள, தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை விற்பனை மையம், பல்முனை சேவை  மையம், வங்கிப் பிரிவு, பார்சல் அனுப்பும் இடம் போன்ற அஞ்சல் சேவை பிரிவுகள் மற்றும் ஆதார் மையம் இயங்கி வரு கின்றன. தினந்தோறும் தலைமை அஞ்சல கத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள், ஓய்வூதியர்கள் வந்து செல்கின்றனர். இங்கு போதுமான அளவு காற்றோட்ட வசதி இல்லாமல் இருக்கிறது. தற்சமயம் கோடைகாலம் என்பதால், பட்டுக்கோட்டை பகுதியில் அதிக வெப்பத் தாக்குதல் காணப் படுகிறது. பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தின்  பல்முனை சேவை மையத்தில் பொது மக்கள் அமரும் இடத்தில் மின் விசிறி பழு தடைந்துள்ளது. ஆதார் மையத்தில் போது மான மின்விசிறி வசதி இல்லை. இதனால் தலைமை அஞ்சலகத்திற்கு வரும் முதிய வர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள், வர்த்த கர்கள், ஓய்வூதியர்கள், அரசு அலுவலர்கள் சார்பில், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் வ.விவேகானந்தம், செயலாளர் ஈகா வைத்தியநாதன், பொருளாளர் மா. வீரபத்திரன், துணைத் தலைவர் ரெஜி னால்ட் செல்வகுமார், துணை செயலாளர்  ஞா.ஜெயசீலன் ஆகியோர், பட்டுக்கோட்டை  தலைமை அஞ்சலக அதிகாரி, பட்டுக் கோட்டை அஞ்சலக கண்காணிப்பாளர் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.