திருச்சிராப்பள்ளி, ஜூன் 15 - திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக டாக்டர் நேரு பொறுப் பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவ மனை வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படும். நோயாளி களின் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பற்றாக் குறையை சரிசெய்ய நட வடிக்கை எடுக்கப்படும். சிகிச் சையின் போது ஏதாவது குறை இருந்தால் நோயாளி களே என்னிடம் நேரில் தெரிவிக்கலாம். நோயாளி கள் மற்றும் உடன் தங்கியிருப் பவர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படும். மருத் துவமனை வளாகத்தில் இயங்காமல் இருக்கும் 3 லிப்ட்களை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகளை மிகவும் மதித்து நடத்த வேண்டும் என்று அனைத்து மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களுக்கு அறிவுறுத்தப் படும்” என்றார்.