districts

img

கோவில் மனையில் குடியிருப்பவர்களுக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

திருவாரூர்,டிச.19- திருவாரூரில் கோவில் மனையில் குடியிருப்போரு க்கு 25 ஆண்டுகளுக்கு சேர்த்து வாடகை வசூல் செய்யும் முடிவை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இல்லா விட்டால் காலி செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறது. இத னைக் கண்டித்தும் கோவில் மனையில் குடியிருப்பவர்க ளின் வாழ்வாதாரத்தை பாது காத்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு நட வடிக்கை மேற்கொண்டு கோயில் மனையில் குடியி ருப்போருக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தியும் திருவாரூர் பழைய பேருந்து நிலை யம் முன்பாக திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனை த்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திரு வாரூர் வர்த்தகர்கள் பாது காப்பு சங்கத் தலைவர் ஆரூர் .ராஜேந்திரன் தலை மை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி கண்டன உரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் டி.முரு கையன், நகர செயலாளர் கேசவராஜ் மற்றும் திருவா ரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து வணிக சங்கங்களில் கூட்டமைப்பு நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.