மயிலாடுதுறை, ஜூன் 16- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி ஒன்றிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிதி வசூலில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரி யேல், அம்மையப்பன் ஆகி யோர் தலைமையிலான 4 குழுவினர் கடந்த ஓரிரு நாட்க ளாக உண்டியல் மூலம் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று கட்சி நிதி வசூலில் ஈடுபட்டனர். இலுப்பூரில் நடைபெற்ற நிதி வசூல் இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் துவக்கி வைத்தார்.