districts

img

கீழ்வேளூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், அக்.9 - திருக்குவளை வட்டம் கொளப்பாடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 100 பய னாளிகளுக்கு சுமார் ரூ.5.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட  ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கி னார். கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி கலந்துகொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.