districts

img

புத்தகங்களோடு புத்தாண்டை வரவேற்ற மயிலாடுதுறை

மயிலாடுதுறை, ஜன.3 - மயிலாடுதுறையில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  “புத்தாண்டை புத்த கங்களோடு வரவேற்போம்” நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் நா.இராசாராமன் தலைமையில் ஆர்ஓஏ கட்டிடத்தில் நடை பெற்றது. வரவேற்புக் குழு தலைவர் வ. பழனிவேலு  வரவேற்றார்.  ‘2022 புத்தாண்டைப் புத்தகங் களோடு வரவேற்போம்’ என்ற தலைப் பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  எழுத்தா ளர் ஆயிஷா நடராஜன் எழுதிய நூல்  அறிமுகமும் நடைபெற்றது. குறும்படம்  திரையில் நிகழ்ச்சியை மூவலூர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக மாப்ப டுகை ம.இளையராஜா, திருக்கடையூர் என்.எஸ். உதயகுமார் ஆகியோர் நாட் டுப்புறப் பாடல் பாடினர். மாவட்டச் செய லாளர் பேரா. ப.பாலசுந்தரம் விழா வினை தொகுத்து வழங்கினார். கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர்  நாகைமாலி புத்தக விழாவை தொடங்கி  வைத்து, புத்தக வாசிப்பின் முக்கியத் துவம் குறித்து உரையாற்றினார். நல்லா சிரியர் விருது பெற்ற அ.அப்துல் ரகீம்  என்பவரை பாராட்டி பட்டதாரி ஆசிரியர்  த.லீலாவதி உரையாற்றினார்.

முது கலை தமிழாசிரியர் வீதி.முத்துக்கணிய னின் “இது யாருடைய வகுப்பறை” என்ற  நூல் குறித்தும், முனைவர் ந.சர வணனின் “கற்றல் யாதெனில் கல்வி”  என்ற நூல் குறித்தும், வட்டார வள மைய ஆசிரியர் அ.தெய்வமோகனின் “வன்முறை இல்லா வகுப்பறை” என்ற  நூல் குறித்தும் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். புத்தக ஆர்வலரும், தொழிற்சங்க தலைவருமான ஆர்.ராமானுஜம் நிகழ்ச் சியை வாழ்த்தி பேசினார். எழுத்தாளர்  ஆயிஷா நடராஜன் காணொலி வாயி லாக விழா பேருரையாற்றினார்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் து.கணேசன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் இரா.இரவீந்திரன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர். தேன்மொழி,  ஆர்.கலா ஆகியோர்  றப்பு விருந்தி னர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் து.இளவரசன் நன்றி கூறினார். விழாவில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற் பனை செய்யப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக விவ சாய சங்க பொறுப்பாளர்கள் எஸ்.துரை ராஜ், த.ராயர், டி.எல். ராஜேஸ்வரன், தலைமையாசிரியர் இரா.தாமரைச் செல்வி, த.மு.எ.க.ச மாவட்டக்குழு  உறுப்பினர்கள், கிளை பொறுப்பாளர் கள், புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.