districts

img

நூல் வெளியீட்டு விழா: யுகபாரதி பங்கேற்பு

கோவை, மே 5- பொள்ளாச்சியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பாடலாசிரியர் யுகபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வர்த்தகர் சங்க கட்டிடத்தில், மீனாட்சிசுந்தரம் இயற்றிய அந்தாதி இலக் கியம் ஓர் ஆய்வு என்ற நூல் வெளியிட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தொல்லியல் ஆய் வாளர், கல்வெட்டியல் அறிஞர் கெ.சுப்புராயலு தலைமை வகித்தார். நூலாசிரியரின் இணையர் எஸ்.விசயலக் குமி வரவேற்றார். கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் யுக பாரதி நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். குடந்தை அரசினர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூலை அறிமுகம் செய்து உரை யாற்றினார். இதில் மொழிபெயர்ப்பாளர் கமலாலயன் மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலா ளர் கவிஞர் பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், சு.கண்ணன் நன்றி கூறினார்.