districts

img

கீழையூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி

நாகப்பட்டினம், மார்ச் 2-  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட கீழை யூர் காளியம்மன் கோவில் அருகில் பகுதிநேர நியாய விலை கடைய கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி திறந்துவைத்தார். கீழையூர் ஊராட்சி கடை தெருவில் உள்ள நியாய விலை கடையில் காளி யம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை க்கு நீண்ட தூரம் சென்று பொருள் களை வாங்க வேண்டிய சூழல் நிலவி யது.  எனவே, அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும் என சட்டமன்ற உறுப் பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், கீழையூர் காளி யம்மன் கோவில் அருகில் பகுதிநேர நியாய விலை கடைய கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு கீழையூர் வடார வேளா ண்மை வளர்ச்சிகுழு தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன் தலைமை வகித்தார். சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செய லாளர் டி. வெங்கட்ராமன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.