districts

img

பரமேஸ்வரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் செட்டில்மெண்ட் தொகை கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 6-

      திருச்சிராப்பள்ளி ராம்ஜிநகர் பகுதியில் உமா பரமேஸ்வரி பஞ் சாலை செயல்பட்டு வந்தது. 820 தொழிலாளர்கள் வேலை செய்து  வந்தனர். ஆலை 2007 ஆம் ஆண்டு  மே மாதம் மூடப்பட்டது. 820  தொழிலாளர்களுக்கும் சென்டில் மென்ட் தொகை ரூ13 கோடி வழங்க  மில் நிர்வாகத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் மூலம்  வந்த ரூ 37 கோடியே 68 லட்சத்தை சென்னை கலைத்தல் (ஒ.எல்) அதி காரியிடம் வழங்காமல் பஞ்சாலை யை ஏலம் விட்ட நிறுவனம் பணத்தை தம்மிடமே வைத்துக் கொண்டது.  

    இதனால் தொழிலாளர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை கிடைப்ப தில் காலதாமதம் ஏற்படுகிறது. இத னால் தொழிலாளர்கள் கடும் இன்ன லுக்கு ஆளாகி உள்ளனர். பஞ்சா லையில் பணிபுரிந்த தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்த பி.எப். கிரா ஜிவிட்டி, சொசைட்டிக்கு பிடித்தம்  செய்த ரூ.15 கோடியை தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டும். பஞ்சாலையை ஏலம் விட்டு பணத் தைக் கட்டத்தவறிய நிறுவனம், இதற்கு ஆதரவாகச் செயல்படும் கலைத்தல் அதிகாரி மீதும் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி தாலுகா பஞ்சாலைத் தொழி லாளர் (சிஐடியு) சங்கம் சார்பில்  செவ்வாயன்று ஆட்சியர் அலுவல கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந் தது.

   ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செய லாளர் சங்கர் தலைமை வகித்தார். ஏராளமான பஞ்சாலை தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், துணைத்தலைவர் சிதம்பரம், துணைசெயலாளர்கள் சீனிவாசன், ஆண்டி, துணை பொரு ளாளர் சீனிவாசன் ஆகியோர்  ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். தொட ர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.