districts

img

பரமசிவபுரம் - பருத்திக்குடி நாட்டாறில் புதிய இணைப்பு பாலம் கட்ட கோரிக்கை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 4 - மயிலாடுதுறை மாவட் டம் குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெ ரும் கண்டன போராட்டம் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.முரளி தலைமை திங்களன்று நடை பெற்றது. பரமசிவபுரம் முதல் பருத் திக்குடி செல்லும் நாட்டாறு பாலத்தை இடித்து 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இரு பகுதிகளிலும் உள்ள சுமார் 25-க்கும் மேற் பட்ட கிராம மக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்ற னர். நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை அதி காரிகளிடம் பலமுறை முறை யிட்டும் எந்தவித நடவ டிக்கையும் இல்லாத நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற போராட்டத்திற்கு பி. ராமலிங்கம், எஸ்.மருதை யன், கிளை செயலாளர் பி. சத்யா ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், ஒன்றிய செய லாளர் சி.விஜயகாந்த், மாவட் டக் குழு, ஒன்றியக்குழு  உறுப்பினர் கண்டன உரை யாற்றினர்.  சாலை மறியல் போராட் டம் அறிவித்திருந்த நிலை யில், முன்னதாக போராட்டக்  களத்திற்கு வந்த அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் பணிகளை மேற்கொள்ள நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடத்தப் பட்டது.

;