திருநெல்வேலி, ஏப்.23-
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்ய வில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேக மாகச் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்தி ருக்க வேண் டும். சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இத னால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ள ளவு கொண்ட பாபநாசம் அணையில் 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் பத்து அடி வரை சகதி தான் உள் ளது. தற்போது அணையான குட்டை போல் காட்சியளிக்கிறது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக் குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணி முத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் 5,511 மில்லி யன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப் படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடிமட்டுமே நீர் இருப்பு இருந்தது. தென் மேற்குப் பருவமழைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரைத் நம்பிதான் மக்கள் உள்ளனர்.