districts

img

பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணியில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்குக! சிபிஎம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபிஷேக புரம் பகுதி செயலாளர் வேலுச் சாமி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மனு  அளித்தனர்.  அந்த மனுவில், ‘‘திருச்சி பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, எட மலைப்பட்டி புதூர், பிராட்டி யூர், கிராப்பட்டி, காஜா மலை, சாத்தனூர் ஆகிய பகு திகளில் விவசாய தொழிலா ளர்கள் மற்றும் கூலித் தொழி லாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், பஞ்சப் பூர் பேருந்து நிலையத்தில் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் திருச்சி தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பஞ்சப்பூர் பகுதியில் விபத்தை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்  சாலை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும்’’ என கூறியுள்ள னர்.  கிளைச் செயலாளர்கள் சதாசிவம், சேட்டு, பழனி வேல், மோகன்ராஜ், பெரிய சாமி,  நஜ்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;