கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், கடம்பர் கோவில் காவிரி கரையோரத்தில் பனைவிதைகள் நடும் நெடும் பணியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பனைவிதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தார். குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட வன அலுவலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.