districts

img

3,500 சதுர அடியில் ஓவியம் வரைந்து குமரியில் ஓவியர் ஸ்ரீராஜ் சாதனை

அருமனை, பிப். 24- கேன்வாசில் காபி தூள் மற்றும்  தண்ணீர் கலவை மூலம் ஒன்பது  நாட்களில் 3,500 சதுரஅடி பரப்ப ளவு கொண்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் உருவபடத்தை தீட்டி குமரி ஓவியர் ஸ்ரீராஜ் சாதனை  படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மஞ்சாலுமூடு, சிறக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராஜ் (33). சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் அசாத்திய திறமை படைத்தவர். ஆனால், வறுமை இவரது சாதனைகளுக்கு தடையாக உள்ளது. எனினும், தனது விடாமுயற்சியால் 25 அடி உயரமும், 20 அடி அகலமும் கொண்ட  அப்துல்கலாமின் சார்க்கோட் பென்சில் ஓவியம், ஒன்றரை லட்சம்  உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா உருவம், பேப்பர், அட்டை கள், பசை, கம்பிகள் போன்ற வற்றை பயன்படுத்தி 80 கிலோ  எடைகொண்ட பிரஷை பயன் படுத்தி, சமூக சீர்திருத்தவாதி ஐயங் காளியின் படத்தை வரைந்தது, போன்றவை இவரது முந்தைய சாதனைகள். கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கில், மொ சைக் ஆர்ட் மூலம் 3 லட்சத்து 57 ஆயி ரத்து 216 தீக்குச்சிகளை பயன் படுத்தி 6 அடி நீளமும் 4 அடி அக லமும் கொண்ட சார்லி சாப்ளின் படத்தை உருவாக்கி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.  இந்நிலையில் இவர் மீண்டும்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில், இங்கி லாந்து அரசி எலிசபெத்தின் பெரிய அளவிலான உருவப்படத்தை, கேன்வாசில் ஓவியமாக தீட்ட முடிவு  செய்தார். இதற்காக 70 அடி நீளமும்,  50 அடி அகலமும் கொண்ட 3,500  சதுர அடி பரப்பளவில் கேன்வாஸ் உருவாக்கினார். அதில் காபி தூள்  மற்றும் தண்ணீர் கலந்து இயற்கை  முறையிலான கலவையை உரு வாக்கி, அதைக்கொண்டு எலிச பெத் ராணியின் ஓவியத்தை தீட்டத்  தொடங்கினார். 9 நாட்களாக சுமார்  90 மணி நேரத்தில் இவர், இந்த ஓவியத்தை தீட்டி முடித்தார். இந்த ஓவியத்தை பொது மக்கள் முன்பு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி, மஞ்சாலுமூடு நாராயண குரு பொறியியல் கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் பாலாஜி சித்தார்த், மேல்புறம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலா ளர் ஷைனி கார்ட்டன், மஞ்சாலு மூடு பஞ்சாயத்து, தலைவர் தீபா  செல்வன், கல்லூரி பேராசிரியர் கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சாதனை ஓவி யத்தை தீட்டிய ஓவியர் ஸ்ரீராஜ் மற்றும் அவரது தாயார் சுசீலா ஆகி யோர் சிறப்பிக்கப்பட்டனர். ஓவி யர் ஸ்ரீராஜ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தைச் சேர்ந்தவராவார். சாதனை குறித்து ஓவியர் ஸ்ரீராஜ் கூறுகையில்,  ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நானும், அம்மாவும் கூலி வேலைக்கு செல் கிறோம். சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் அலாதி பிரியம் ஏற்பட்ட தால், தொடர்ந்து படங்களை வரைந்து வருகிறேன். பெயின்ட்  மற்றும் கலர்களை பயன்படுத்தா மல் காபி தூள் மற்றும் தண்ணீர்  கலந்து தயாரித்த கலவை மூலம்  எலிசபெத் ராணியின் உலகின் மிகப்பெரிய உருவப்படத்தை தீட்டி  உள்ளேன். எலிசபெத் ராணி  கலைகளை மிகவும் நேசித்த வர். அவரது அரண்மனையில் ஏராளமான கலை பொக்கிஷங் களை அவர் சேகரித்து வைத்த தால் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். எனவே தான், எனது சாதனைக்கு அவரது படத்தை தேர்வு செய்தேன். இந்த படைப்புக்கு கின்னஸ் சாதனை கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.