நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூரை அடுத்துள் காமேஸ்வரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். தற் போது சம்பா அறுவடை நடைபெற்றுக் கொண்டிருப்ப தால் அப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டுனெ பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், காமேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசுதா, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சௌரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கந்தசாமி, கிளைச் செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம்.மணமேல் குடியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்ட (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலர் ராஜாராம் துவக்கி வைத்தார். மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வர வேற்றுப் பேசினார். இந்நிகழ்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்க நிலை மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மண மேல்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் எஸ்.எம் சீனியர், குழந்தை நல மருத்துவர் சுகன்யா, முடநீக்கியல் நிபுணர் ஜெயகர், மனநல மருத்துவர் சுந்தரமூர்த்தி,காது மூக்குத் தொண்டை நிபுணர் மருத்துவர் சுனைத்கான், கண் மருத்துவர் சிவரஞ்சனி, புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டாரக் கல்வி அலுவலர் செழி யன், வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் இளைய ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா.நடேசன், வட்டார வளமைய அலுவலர் (பொ) சிவயோகம் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் மாணவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப் பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இலவசச் சீருடை
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் விழா. கல்லூரி முதல்வர்(பொ) கே.ரேணுகாதேவி தலை மையில் நடைபெற்றது. 300 நாட்டு நலபணித்திட்ட. மாணவ, மாணவிகளுக்கான சீருடைகளை ப்ரன்ஸ் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர், சமூகச் சேவகர் ஆடிட்டர் ரெ. தங்கதுரை வழங்கினார். நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், கல்லூரி. ஆங்கிலத் துறை பேரா. ஜீவரெத்தினம் உட்பட இருபால் பேராசிரி யர்கள். அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ் வரவேற்றுப் பேசினார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் ப.செந்தில்குமார் நன்றி கூறினார்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,700 வழக்குகளுக்குத் தீர்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,791 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு ரூ. 11.59 கோடி பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையி லுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்ப தற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக் கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதி பதி பி.மதுசூதனன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. மலர்விழி, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் எம். இளவரசி கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சிறப்புச் சார்பு நீதிபதி எஸ். தங்கமணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். சுசீலா, வழக்குரை ஞர் யு. எலன் ரோஸ் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. கீதா, மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி, வழக்குரைஞர் கே. தம்பிதுரை ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் சிவில் வழக்குகள், காசோலை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், முன் வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்கு களில் ரூ. 4 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரத்து 189 அளவுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளில் நடத்தப்பட்ட விசாரணை மூலம், மாவட்டத்தில் மொத்தம் 1,791 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 11 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 156 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகை யாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூரில் பிப்.16-இல் தர்ணா நகராட்சி-மாநகராட்சி ஊழியர்கள் முடிவு
தஞ்சாவூர், பிப்.12- தமிழ்நாடு நகராட்சி, மாந கராட்சி அனைத்து சங்கங் களின் தஞ்சாவூர் மண்டல அளவிலான ஒருங்கிணைப் புக் குழு ஆலோசனைக் கூட் டம் தஞ்சாவூரில் நடைபெற் றது. தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் கோதண்ட பாணி, மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, நகராட்சி மாநக ராட்சி அலுவலர் சங்க மாநி லப் பொருளாளர் இரா. சுவா மிநாதன், மாநிலத் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அர சாணை எண் 152, 10 ஆகி யவை குறித்து விவாதிக்கப் பட்டது. இந்த ஆணைகள் மூலம் பணியிடங்கள் குறை ப்பு, தூய்மை பணியாளர் பணியிடங்கள், பொறியியல் பிரிவு பணியிடங்கள், ஓட்டு நர் பணியிடங்கள் அவுட் சோர்சிங் முறையில் பணி யமர்த்தப்பட உள்ளதால் ஏற்கனவே பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கும், இனிவரும் காலங்களில் நக ராட்சி, மாநகராட்சிகளில் நிரந் தர பணிகள் ஒழிக்கப்படும் எனத் தெரியவருகிறது. எனவே, அரசாணை எண் 152, மற்றும் 10 ஆகிய வற்றை திரும்ப பெறக் கோரி பிப்.16 ஆம்- தேதி, அனைத்து மண்டல நக ராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக மாலை நேர தர்ணா நடத்து வது, பிப்.28-ஆம் தேதி சென் னையில் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் பெருந்திரள் முறையீடு மனு அளிப்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பொறையாரில் இரத்ததான முகாம்.
மயிலாடுதுறை, பிப்.12- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் தபேமாலு கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியும் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர். முனைவர்.ஜான்சன் ஜெயக்குமார், கல்லூரியின் காசாளர். முனைவர். ஜூலியஸ் விஜயகுமார் மற்றும் இந்தியன் செஞ்சிலுவை சங்க மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பேரா. முனைவர் ஜீ.வி பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேரா. கவிதா, இளஞ்செழியன் மற்றும் பெண்கள் அமைப்பு தலைவர் பேரா. ஷீபா ஜூலியஸ், மயிலாடுதுறை மற்றும் ஆக்கூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் நெல்சன் அமிர்தராஜ் நன்றி கூறினார்.
இலவச கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், பிப்.12- அய்யம்பேட்டையை அடுத்துள்ள சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாத் சபை, பாசமலர் வெல்பேர் அசோசியேசன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. சக்கராப்பள்ளி புருணை தாருஸ்லாம் கூடத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஜமாத் சபை தலைவர்கள் நஜீப், அக்பர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜமாத் சபை செயலாளர்கள் இலியாஸ், அன்வர், பொருளாளர் ஜமால் முன்னிலை வகித்தனர். ஜமாத் சபை பொதுச் செயலர் ஆரிப் வரவேற்றார். முகாமில் மருத்துவக் குழுவினர் 550-க்கும் மேற்பட்டவர்களை பரிசோதனை செய்தனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக 55 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலவசப் பொருட்கள் வழங்கல்
பாபநாசம், பிப்.12- பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் வலங்கைமானை அடுத்துள்ள தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள சுமார் 140 முதியோர்களுக்கு வேஷ்டி, துண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் உட்பட சுமார் ரூ 60,000 மதிப்பிலானப் பொருட்களை வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி நிர்வாக இயக்குநர் சித்தார்த்தன், ஜெயந்தி, பள்ளி முதல்வர் செல்வி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நூலக விழா
பொன்னமராவதி, பிப்.12- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிளை நூலகத்தின் சார்பில் நூலக நண்பர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்விற்கு இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவிஞர் கொன்னையூர் மா.கணேஷ் வரவேற்புரையாற்றினார். நூலக நண்பர்களுக்கு நூல் பைகள், நூல் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
டெங்கு கொசு ஒழிப்புப் பணி
பாபநாசம், பிப்.12- பாபநாசத்தை அடுத்துள்ள பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையமும்-ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றடும் இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டன. ரெகுநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளத் தெரு, முதலியார் தெரு, அக்ரஹாரம், உள்ளிட்டத் தெருக்களில் புகை மருந்து அடிக்கப்பட்டது. புகை மருந்து அடிக்கும் பணியை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.
மமக கொடியேற்று விழா
பாபநாசம், பிப்.12- மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சுவாமிமலையில் கட்சியின் கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பாதுஷா, மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிபாயி, மாநில விவசாய அணி செயலாளர் ரஹமத் அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்டத் தலைவர் முஸ்தபா, பாபநாசம் ஒன்றியத் தலைவர் கலீல் ரகுமான், பாபநாசம் பேருர் தலைவர் பாரூக், பேரூர் செயலாளர் ஜாகிர் மற்றும் சுவாமிமலை பேரூர் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி அடுத்தாண்டு தொடங்கும்
ஒன்றிய அரசு கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.12- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என ஒன்றிய அரசு கூறி யுள்ளது என்று மாநில மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார், சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்து, அவர்களுக்கு அளிக் கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்தார். அப்போது, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்.சாந்திமலர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா ஆகியோர் உடன் இருந்த னர். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: சென்னை சைதாப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் செயற் கையாக நடைபெற்ற சம்பவம். இதில் 2 பேருக்கு 2 சதவீதம், 2 பேருக்கு 40 சதவீதம், ஒருவருக்கு 32 சத வீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேரை யும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர மாக போராடி வருகிறார்கள். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது, அ.தி.மு.க. அரசு கட்டுமானப் பணிக்கு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. ஒன்றிய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டார்கள். அந்த நிலமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நிலம் வழங்க தாமதம் ஏற்பட்டதால்தான் கட்டு மானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று ஒன்றிய அமைச்சர் கூறி யுள்ளது ஏற்கக்கூடியது இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதேபோல, கோயம் புத்தூரிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவ மனையை கட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று சொன்னார்கள். கடந்த வாரம் நான் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றோம். கூட்டத் தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028 ஆம் ஆண்டு இறுதி யில் தான் முடியும் என்று கூறி யுள்ளார்கள். இது தான் உண்மை நிலவரம். மருத்துவமனை வேலை முடிந்துவிட்டது என்று ஒன்றிய அரசு கூறுவது சரியானது இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை வேண் டும் என்கின்ற கோரிக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்படும் நோக் கமே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி யில் மாணவர்களும் படிக்க வேண் டும், மாணவர் சேர்க்கையும் அனு மதிக்க வேண்டும், அதே நேரத்தில் விரைந்து கட்டுமான பணியினை முடித்து ஏழை எளிய மக்களுக்கு தரத்துடன் கூடிய மருத்துவ சேவை யை மதுரை போன்ற மக்கள் பெற வேண்டும் என்கின்ற வகையில் தான் கட்டுமான பணியினை தொடங்க வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.