districts

img

ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஏப்.17- உலகிலேயே அதிகளவில் ஓசோன் காற்று வீசும் ஒரு சில  கடற்கரையில் தரங்  கம்பாடி முதன்மையானதாகும். வழக்க மாக ஓசோன் கலந்த காற்று வீசினாலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசி வரு கிறது. இக்காற்றினை சுவாசிக்க நாட்டின்  பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடு களை சேர்ந்தவர்களும்  ஆயிரக்கணக்கா னோர் வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில், ஓசோன் காற்றின் நன்மையை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை எதிர்புறம் உள்ள மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.

 இதில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்  பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆகாய விழிப்புணர்வு இராட்சச பலூனை பறக்கவிட்டனர்.

 மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலை வர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி  மன்றத் தலைவர் சுகுண சங்கரி, துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலு வலர் பூபதி.கமலக்கணாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.