சென்னை,டிச.7- தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய தொழில் குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மான அளவு விற்பனை குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாயன்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவங்களின் பெயரையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிடவில்லை. எனினும் இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் ஆகியவை என்பதை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுவிட்டன. இரண்டு தொழில் குழுமங்களி லும் நடத்தப்பட்ட சோதனையில் 10 கோடி ரூபாய் பணமும் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள நகைகள், துணி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடு பட்டுள்ள இரண்டு தொழில் குழு மங்களுக்குச் சொந்தமான 37 கடை களில் வருமான வரித்துறை சோத னை நடத்தியதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தொழில் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகள் மூலம் அக்குழுமத்தில் கணக்கு களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வும் பல ஆண்டுகாலமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக விற் பனை குறைத்து காட்டப்பட்டுள்ள தாகவும் வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ஆடைகள் மற்றும் நகை விற்பனை பிரிவில் கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கொண்டு 150 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. இரண்டாவது குழுமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் வரி செலுத்த வேண்டிய வருவாயை குறைத்துக் காட்டியதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கணக்கில் காட்டப்படாமல் தங்கம் வாங்கப் பட்டதற்கான ஆதாரங்களும் வரு மான வரித்துறைக்குக் கிடைத்துள் ளது. இத்துடன் வாடகை மற்றும் விற்பனை மூலம் பெறப்பட்டு, கணக்கில் காட்டப்படாத ஏழு கோடி ரூபாய்க்கான ஆவணங்களையும் இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.