திருச்சிராப்பள்ளி, டிச.24 - தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் திருச்சி கோட்ட மாநாடு திருச்சியில் நடந்தது. மாநாட் டிற்கு கோட்டத் தலைவர் கரி காலன் தலைமை வகித்தார். உதவி பொதுச் செயலா ளர்கள் ராஜா, சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். திருச்சி கோட்ட செயலா ளர் மாதவன் ஆண்டறிக் கையை வாசித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், டிஆர்இயு கோட்டச் செயலாளர் வெங்க டேசன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். டிஆர்இயு பொதுச் செயலாளர் ஹரி லால், செயல் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி கோட்டத்தில் 8 மணிநேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். சேஃப்டி கேட்டகிரி பிரிவில் அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை கைவிட வேண் டும். விழுப்புரம், மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் பணி யில் உள்ள, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அவசர சிகிச்சை பெற ரெபரல் மருத்துவமனை அமைக்க வேண்டும். கமர்சியல் பிரிவில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். எக்ஸ்மாசின் டார்கெட் நிர்ப்பந்தத்தை கைவிட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குறைதீர்க்கும் கூட்டத்தை, அந்தந்த பணி மனைகளில் அதிகாரிகள் தலைமையில் நடத்த வேண் டும். பொன்மலை ரயில்வே மருத்துவமனையில், ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலிக்கு போராடிய டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் ராஜா பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 50 சத வீத டிஏஐ அடிப்படை ஊதி யத்துடன் இணைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், புதிய கோட்டத் தலைவராக ஜி. சிவக்குமார், செயலாளராக ஆர்.கரிகாலன், பொரு ளாளராக பி.லெட்சுமிபதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். திருச்சி கோட்ட பொருளாளர் ரமேஷ் நிறை வுரையாற்றினார்.