பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின்கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் புதனன்று திறந்து வைத்தார். வெரிடாஸ் பவுண்டேஷன் தலைவர் டாக்டர். டி.எஸ்.ஸ்ரீதர், நிறுவன நிர்வாக இயக்குநர் தூ.அருள்மணி, முதன்மை கல்வி அலுவலர் மு.முருகாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.