நினைவுப் பரிசு வழங்கல்
பாபநாசம், ஆக.17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் 23 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பாப நாசத்தில் நடந்த நிகழ்ச்சி யில் முன்னாள் ராணுவ வீரர்கள் 23 பேருக்கு சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் தலைவி தில்லை நாயகி, செயலர் திலக வதி, துணைத் தலைவி டாக்டர் நிவேதா, பொரு ளாளர் பத்மதர்ஷினி, மாவட்ட அமைச்சரவை இணைப் பொருளாளர் சம்பந்தம், வட்டாரத் தலைவர் கணேசன், ஒருங் கிணைப்பாளர் பிரபா கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மீன், இதரபொருள் விற்பனையாளர்கள் பேரவை
திருவாரூர், ஆக.17 - திருவாரூர் மாவட்ட மீன் மற்றும் இதரபொருள் விற்பனையாளர்கள் (சிஐடியு) சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் திருவாரூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் எம்.பி.கே. பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, செயலாளர் டி. முருகையன் மற்றும் பலர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலா ளர் எஸ்.அந்தோணி புதிய நிர்வாகிகளை அறிவித்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக டி.லெனின், செயலாளராக எம்.பி.கே. பாண்டியன், பொருளாள ராக சி.செல்லதுரை ஆகி யோர் தேர்வு செய்யப் பட்டனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டி யன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.பி.ஜோதி பாசு மற்றும் அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு சீருடை வழங்கல்
அறந்தாங்கி, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாயக் கர்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. ரோட்டரி தலைவர் அப்துல் பாரி தலைமை யில், துணை ஆளுநர் மருத்துவர் விஜய், பொருளாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலையில், இந்திய மருத்துவ கழகம் அறந் தாங்கி கிளை முன்னாள் தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன் நூறு மாணவ-மாணவியர் களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் விளை யாட்டு சீருடைகளை வழங் கினார். தொடர்ந்து விளை யாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு ஒன்றிய வார்டு கவுன்சிலர் ஜம்பு லிங்கம் பரிசுகளை வழங் கினார். முன்னதாக பள்ளி யின் தலைமை ஆசிரியர் பவுலின் வரவேற்றார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி நன்றி கூறி னார்.
மணமேல்குடி: பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர் தேர்வு
அறந்தாங்கி, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 50 சதவீத, 28 தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். இக்குழுவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் என 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவானது அடுத்த இரண்டு வருடங்களுக்கு பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும், கற்றல் கற்பித்தலில் சிறப்பான மாற்றங்களையும் செய்து கொடுக்க வேண்டும். நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம் ஆகிய பள்ளிகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு, உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நில அளவைவிட குறைவாக பத்திரப் பதிவு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
புதுக்கோட்டை, ஆக.17- தனியார் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை ஏலம் எடுத்ததில், குறிப்பிட்ட நிலத்தின் அளவைவிட குறைவாக பத்திரப் பதிவு செய்து கொடுத்த புகாரில், பாதிக்கப்பட்டவருக்கு வங்கி ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அசோக்நகரைச் சேர்ந்தவர் முத்தழகு மனைவி எலிசா. இவர் கடந்த 2019 இல் தனியார் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த. நத்தம்பண்ணை அபிராமி நகரிலுள்ள 2408 சதுரஅடி நிலத்தை ஏலம் எடுத்துள்ளார். ஏல விதிமுறை களின்படி ரூ.1.73 லட்சம் முன்பணமாகவும், அதனைத் தொ டர்ந்து பல தவணைகளில் மொத்தம் ரூ.17.38 லட்சத்தை வங்கி யில் செலுத்தியுள்ளார் எலிசா. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை முறைப்படி அளந்து கொடுக்காமல், வங்கியினர் எலிசா பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையில் பட்டா கோரி விண்ணப்பித்த போது, அந்த இடம் 1,615 சதுரஅடி மட்டுமே இருந்துள்ளது. 793 சதுர அடி குறைவாக இருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எலிசா வழக்கு தொடர்ந்தார். குறைதீர் ஆணை யத்தின் தலைவர் த.சேகர், உறுப்பினர்கள் எஸ்.சுகுணாதேவி, ஆ. அழகேசன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தி யது. விசாரணையின் முடிவில் குறைதீர் ஆணையம் வெள்ளிக் கிழமை அளித்த தீர்ப்பு விவரம்: ஏலத்தில் எடுக்கப்பட்டு குறைந்திருக்கும் 793 சதுரஅடிக்கு இழப்பீடாக வங்கி நிர்வாகம் ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஏலம் எடுத்த 2019 ஆம் ஆண்டி லிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்கா விட்டால் தொகையுடன் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோகூர்-கல்லணையில் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் அலுவலர்கள் உறுதி
தஞ்சாவூர், ஆக.17 - தோகூர், கல்லணை பகுதியில் அடிக்கடி இரவு நேரங்க ளில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படு வதையும், உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்கக் கோரியும், புதிய மின்மாற்றி, மின் கம்பங்கள் அமைத்து தர வேண்டும். எதையும் கண்டு கொள்ளாத மின்வாரியத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம், தோகூர் கிளை சார்பில் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகம் முன்பு, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதையடுத்து பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மரியஜோசப் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளர், காவல் உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அரசுத் தரப்பிலும், பொதுமக்கள் மற்றும் சிபிஎம் தரப்பில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.காந்தி, பி.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் உதயகுமார், கிளைச் செயலாளர் எம்.அகிலா, வாலிபர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் சி.சத்தியசீலன் மற்றும் தோகூர், கல்லணை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இதில், ‘இரண்டு மாதத்திற்குள் அண்ணா வளைவு மற்றும் காமராஜர் நகரில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மின்தடை சரி செய்து தரப்படும்’ என உதவி மின் பொறியாளர் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
தஞ்சாவூர், ஆக. 17- தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் வங்கிக்கு சென்று வந்த பொழுது, மதியம் 3.30 மணிக்கு அவர் வீடு அருகிலேயே ஆள் இல்லாத கொட்டகையில் நான்கு பேர் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பட்டப் பகலில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே மிக கொடூரமாக நடைபெற்ற இந்த வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகள் நான்கு பேர் பட்டப்பகலிலேயே, எவ்வித குற்ற உணர்வும், அச்சமும் இன்றி கொடூரமான வன்செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான கவிதாசன் என்பவன், ஏற்கனவே கொலைக் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவன். இவர்கள் மூலம் இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விநியோகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே குற்றவாளிகளை தப்ப விடாமல், காவல்துறையினர் விரைந்து வழக்கு நடத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும், நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டம் திருச்சி மாணவர்கள் முதல்வருக்கு நன்றி
திருச்சிராப்பள்ளி, ஆக.17 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக.9 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி களிலும் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அதன்படி, திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 123 கல்லூரிகளில் படிக்கும் 12,655 மாணவர்கள் பயன் பெறுவர். இத்திட்டத்தின் கீழ்பயன் பெற்றவர்கள் தெரி விக்கையில், “என் பெயர் ஜோஷ்வா. நான் ஜிபிடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன். இந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலமாக கிடைக்கிற பணம், எனது குடும்பத்துக்கும் என்னுடைய படிப்பு செலவிற்கும் மிக மிக உதவியாக இருக்கும். இதனால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதல மைச்சருக்கு நன்றி” என்றார். “என்னுடைய பெயர் அப்துல் ஹக்கீம். நான் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் இருந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை படிக் கிறேன். தமிழ் புதல்வன் திட்டம் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். எனவே, தமிழக முதல்வருக்கு உள்ளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
தஞ்சாவூர், ஆக.17 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் குறுவை தொகுப்பு திட்டம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து திட்டம் மற்றும் தேசிய எண்ணை வித்துக்கள் பாது காப்பு இயக்கம் ஆகியவற்றின் கீழ் இலக்குகள் பெறப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொ ருட்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்குவ தற்கு பட்டுக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அண்ணாதுரை, விவசாயிகளுக்கு ஜிங்க் சல்பேட், நெல் நுண்ணூட்டம், பயறு நுண்ணூட்டம், கடலை நுண்ணூட்டம், சூடோமோனஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் பதிவு செய்த விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங் களின்கீழ் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இடுபொருட்களை மேலும், தோட்டக்கலைத் துறையின்கீழ் விவசாயி களுக்கு நெட்டை தென்னங்கன்றுகள், வீட்டு காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் பண்ணை கருவிகளை மானி யத்தில் வழங்கினார்.
பெண்களுக்கு கோலப் போட்டி
பாபநாசம், ஆக.17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான கோலப் போட்டி நடந்தது. தொண்டு நிறுவனத்தின் வளாகத்தில் நடந்த இப்போட்டியில் 22 பேர் பங்கேற்றனர். முதல் நான்கு இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று பலூன் உடைத்தல் போட்டி நடந்தது. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனத் தலைவர் தேவராஜன், செயலர் கண்ணதாசன், வக்கீல் கண்ணன், போட்டித் தேர்வு பயிற்றுநர் லெட்சுமி பிரியா, தையல் பயிற்றுநர் பாத்திமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோயில் பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்
மயிலாடுதுறை, ஆக.17 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத் தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. இதேபோல் செம்பனார்கோயிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செம்பனார்கோயில் காவல் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக செம்பனார்கோயிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காழியப்பநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் உரையாற்றினர்.