திருச்சுழி, ஜன.27- அருப்புக்கோட்டை வட்டம், திருச்சுழி ஒன்றியம், செங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது வாகைக்குளம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான இடத் தில் அரசு மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டது. இதை அறிந்த ஊர் பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதவியை நாடி னர். இதைடுத்து, அருப்புக் கோட்டை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளாக ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் அறிவழகன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி னார். முடிவில் வாகைக்குளம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை அமைக்கப்படாது என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.முருகன், அருப்புக் கோட்டை நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, திருச்சுழி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், வட்டக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஜெயக்குமார், பூரணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.