districts

களப்பால் ஆரம்ப சுகாதார  நிலைய புதிய கட்டிடம் திறப்பு

திருத்துறைப்பூண்டி, ஏப்.16 - திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தினை ஏப்.14 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி  வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து திருப் துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் க.மாரி முத்து குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் (பொ)  எம்.செந்தில்நாதன், விதொச  செயலாளர் ஜெ.ஜெயரா மன், களப்பால் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன், குறிச்சிமூலை ஊராட்சி மன்ற தலைவர் கே. எம்.அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். மேலும் இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்  மரு.எம்.அன்பழகன், களப் பால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கார்த்திகா, மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டி.ராஜ் குமார் ஆகியோரும் பங்கேற் றனர்.