மயிலாடுதுறை, டிச.29 - மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்றம் மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி புதனன்று மண்டல தலை வர் எஸ்.வேல்முருகன் தலைமையில் நடை பெற்றது. மண்டல பொருளாளர் எஸ்.ஜெயராஜ் வர வேற்று பேசினார். மண்டல துணைத் தலை வர்கள் ராஜாராமன், கார்த்திக்கேயன், மண்டல துணைச் செயலாளர் செந்தில் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலை வர் வி.குமார் சங்க கொடியினை ஏற்றி வைத்து பேசினார். சிஐடியூ மாவட்ட செய லாளர் ஆர்.ரவீந்திரன் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். கீழ்வே ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவ னேஸ்வரன், மண்டல செயலாளர் என்.ராசப் பன், மயிலாடுதுறை மண்டல செயலாளர் முரு கன், சிஐடியூ மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.ராமானு ஜம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ப.மாரியப்பன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வ.பழனிவேலு, சிறு விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் டி.துரைக்கண்ணு, கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.என்.டி ரமேஷ் ஆகியோர் சிறப்பித்தனர். ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நிறைவாக மண்டல துணைச் செயலாளர் என்.ஆனந்தராஜ் நன்றி கூறினார்.