திருச்சிராப்பள்ளி, ஆக.30 - திருச்சி சமயபுரம், தன லட்சுமி சீனிவாசன் பல்க லைக்கழகத்தின்கீழ் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதி நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையம், உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷா லிட்டி) பிரிவு மற்றும் புதிய மருந்தகம் திறப்பு விழா வியாழனன்று நடந்தது. அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையம், உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) பிரிவு மற்றும் புதிய மருந்தகம் ஆகியவற்றை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் திறந்து வைத்தார். இந்த அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோ தனை மூலம் நோயினை விரைவாக கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை பெற முடியும். இதன் மூலம் சமயபுரம் மற்றும் மண்ணச்ச நல்லூர் பகுதிகளைச் சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு தொலைதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருக்காது. விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் சி.கே.ரஞ்சன், பதிவாளர் டாக்டர் தனசேகரன் தேவ ராஜ், சீனிவாசன் மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் துளசி, பல்கலைக் கழக முதல்வர்கள், இணை முதல்வர்கள், மருத்துவ மனையின் நிர்வாக மேலா ளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மனை ஊழியர்கள், மருத்து வக் கல்லூரி மாணவ-மாண வியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த எம்ஆர்ஐ ஸ்கேன் மைய திறப்பு விழா சலுகையாக அனைத்து மக்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 29 வரை 50 சத வீதம் தள்ளுபடியில் எடுக்கப் படும்.