திருவாரூர், அக்.13 - திருவாரூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை திமுக ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்குட் பட்ட நெடுஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா குடவாசல் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடை பெற்றது. ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை குடவாசல் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித் தார். மேலும் குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பண்ணையூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.