districts

img

மயிலாடுதுறையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறை, ஜன.29 - மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை, தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை தலைமைச் செய லகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து  வைத்தார். ரூ.457.42 லட்சம் மதிப்பீட்டில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்ட டத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, 5 பயனாளி களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் திருமண உதவித்தொகைக்கான ஆணையும், 5 பய னாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டது.