திண்டுக்கல், ஜுன் 25-
பழனி முருகன் கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே வரவேண்டும் எனறு மலைக்கோவில் தேவஸ்தான நிர்வா கம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பால் இந்த அறி விப்பு அகற்றப்பட்டது.
பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தமிழ்நாடு அல்லா மல் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களி லிருந்தும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மலைக் கோவிலுக்குள் செல்லும் வழியில் படிப்பாதையில் சூடம் ஏற்றக்கூடாது. கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்கக் கூடாது. கைலி அணிந்து வரக்கூடாது. போன்ற அறி விப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்று மதத்தினரைச் சேர்ந்த சிலர் விஞ்ச் ரயில் மூலம் ஏறி வந்து கோவிலுக்குள் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் முருகன் கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பாக பழனியில் தேவஸ்தா னத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. பழனி நகரம் ஒரு சுற்றுலா தலம் ஆகும். மாற்று மதத்தினர் சிலர் குழந்தைகளை அழைத் துக்கொண்டு குடும்பத்தோடு விஞ்ச், ரோப்கார் மூலம் மலைக்கு சென்று சுற்றி பார்ப்பார்கள். கோவிலுக்குள் செல்லாமல் இறங்கிவிடுவார்கள். ஆனால் விஞ்ச், ரோப் காரில் கூட ஏறக்கூடாது என்பது போன்ற அறிவிப்பு பலகை யை தேவஸ்தானம் வைத்திருப்பது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்து,எதிர்ப்பு தெரிவித்தனர்.இத னைத்தொடர்ந்து அந்த அறிவிப்பு பலகை அகற்றப் பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி கும்பல், அறிவிப்பு பலகை அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியின் இச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள் ளது.