திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூரில் ஆன்-லைன் ரம்மி விளை யாட்டில் பணத்தை இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்ததுக்கொண்டார். திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை குடியிருப்பில் வசிப்ப வர் இசக்கிமுத்து மகன் ரவிசங்கர் (42). இவர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவமனை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான ரவிசங்கர் கடன் வாங்கி விளையாடி பணத்தை இழந்துள்ளார். கடன் தொல்லை அதிகமானதால் இரண்டு நாட்களாக பணிக்குச் செல்லாமல் இருந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டுத் தூங்கியுள்ளார் சனிக்கிழமை காலை வழக்கம் போல் ரவிசங்கரின் மனைவி ராஜலட்சுமி கணவரை எழுப்பியுள்ளார். அவர் எழுந்திருக்காத நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ரவிசங்கரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாகக் கூறியுள்ளனர். இது குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் ரவி சங்கர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசா ரணை நடைபெற்று வருகிறது. உயிரை மாயத்துக்கொண்ட ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற ஆறு வயது மகன் உள்ளார்.